என் “உயிர் போறதுக்குள்ள… இன்பநிதி ஐயாவை முதல்வராக பார்த்து விட வேண்டும் – தி.மு.க. எம்.எல்.ஏ உருக்கம்!

என் “உயிர் போறதுக்குள்ள… இன்பநிதி ஐயாவை முதல்வராக பார்த்து விட வேண்டும் – தி.மு.க. எம்.எல்.ஏ உருக்கம்!

Share it if you like it

தி.மு.க. மாஜி. என்.எல்.ஏ. வி.பி. ராஜன் இன்பநிதி தமிழகத்தின் முதல்வராக வர வேண்டும் என உருக்கமாக பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா நிறைவு பொதுக்கூட்டம், கடலூர் புதுப்பாளையம் கடை வீதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாநகர செயலாளர் கே.எஸ். ராஜா தலைமை தாங்கினார். கட்சியின் மூத்த நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டர்.

இக்கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி. ராஜன் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு கூறினார் ;

கருணாநிதிக்கு பிறகு, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவரது, மகன் உதயநிதி தற்போது அமைச்சராகி உள்ளார். விரைவில், அவர் துணை முதல்வராக பொறுப்பு ஏற்பார். இன்னும், எத்தனை ஆண்டு காலம் நான் உயிரோடு இருப்பேன் என்பது எனக்கு தெரியாது. எனக்கு, ஒரே ஆசை இன்பநிதி ஐயாவையும் தமிழக முதல்வராக நான் பார்த்து விட வேண்டும் என உருக்கமாக பேசியுள்ளார். இக்காணொளி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it