பெண் ஊழியரை செருப்பு எடுத்து வரச்சொன்ன ஆணையர்!

பெண் ஊழியரை செருப்பு எடுத்து வரச்சொன்ன ஆணையர்!

Share it if you like it

ஹிந்துசமய அறநிலையத்துறையை சேர்ந்த ஆணையர் ஒருவரின் செருப்பை பெண் ஊழியர் கொண்டு வந்து கொடுப்பது போன்ற காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில், நடப்பது மக்களாட்சியா? அல்லது மன்னர் ஆட்சியா? என்ற கேள்வியை தற்போது தமிழக மக்கள் எழுப்பி வருகின்றனர். தமிழகத்தை இனி என்னால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற ஆணவ போக்கில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆட்சி இருந்து வருகிறது. அதற்கு, வலுசேர்க்கும் விதமாக, உதயநிதியின் பேச்சும், செயல்பாடுகளும் அமைந்துள்ளன.

இது ஒருபுறம் இருக்க, தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், தங்களுக்கு கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் அவமதிப்பு செய்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

இப்படிப்பட்ட சூழலில் தான், ஹிந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த ஆணையர் ஒருவரின் செருப்பை, அக்கோவிலில் பணியாற்றும் பெண் ஊழியர் கொண்டு வந்து கொடுப்பது போன்று அந்த காணொளி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it