உதயநிதி ஸ்டாலின் ஸ்வாஹா… திராவிட மாடல் ஸ்வாஹா… திராவிட பூசாரியின் அலப்பறை!

உதயநிதி ஸ்டாலின் ஸ்வாஹா… திராவிட மாடல் ஸ்வாஹா… திராவிட பூசாரியின் அலப்பறை!

Share it if you like it

தி.மு.க. சார்பில் நாமகல்லில் நடைபெற்ற பூமி பூஜையில் வித்தியாசமான முறையில் பூமி பூஜை செய்த புரோகிதர் ஒருவரின் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

நாங்கள் பெரியாரின் சீடர்கள், எங்களுக்கு கடவுள் நம்பிக்கை துளியும் இல்லை என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கின்றனர். எனினும், இவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் இன்று வரை ஆலயங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர். கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று ஊருக்கு உபதேசம் செய்யும் இவர்கள்தான் ஆன்மீகத்தில் மிக தீவிரமாக உள்ளனர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், தி.மு.க. சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பூமி பூஜையில் வித்தியாசமான முறையில் புரோகிதர் ஒருவர் மந்திரம் ஓதிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it