அரசு பள்ளிகளின் அவலம்… அறிவாலய ஊடகத்தின் நிலை!

அரசு பள்ளிகளின் அவலம்… அறிவாலய ஊடகத்தின் நிலை!

Share it if you like it

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலைமை பெரும் கேள்வியாக மாறியுள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட காணொளியும், பதிவும் இதோ.

சிதிலமடைந்து கிடக்கும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை, தொடர்ச்சியாக அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது. நாட்டின் எதிர்காலத் தூண்களான பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்காமல், தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். நேற்று ஆண்டிப்பட்டியில் அரசுப் பள்ளி மாணவர்களை கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்த அவலம் நடந்திருக்கிறது

கடந்த ஒரு ஆண்டில் மட்டும், இதுபோல அரசுப் பள்ளி மாணவர்களை, கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைப்பது தொடர்கதை ஆகியிருக்கிறது. ஆனால், அரசு இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க எந்த வித நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அரசுப் பள்ளிகள், அவர்களை மேலும் அவல நிலையில் தள்ளுவதையே தொடர்ந்து செய்து வருகின்றன.

தமிழகத்தில் பல தலைவர்களும், அறிஞர்களும், விஞ்ஞானிகளும் அரசுப் பள்ளியில் படித்து முன்னேறியவர்கள் என்பதை திறனற்ற திமுக அரசு ஞாபகத்தில் கொள்ள வேண்டும். உடனடியாக அரசு தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தனது துறை நாட்டின் எதிர்காலத்துக்கு எத்தனை முக்கியமானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்


Share it if you like it