தமிழகத்தில் தலை தூக்கும் துப்பாக்கிக் கலாச்சாரம்… முதல்வரை தேடும் நெட்டிசன்கள்!

தமிழகத்தில் தலை தூக்கும் துப்பாக்கிக் கலாச்சாரம்… முதல்வரை தேடும் நெட்டிசன்கள்!

Share it if you like it

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் ஏற்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருக்கிறார்.

தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சந்தி சிரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக, கொலை, கொள்ளை, திருட்டு, கஞ்சா புழக்கம் மற்றும் ரவுடிகளின் அட்டூழியங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் :

கொலை நகரமாகிக் கொண்டிருக்கும் கோவை! கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கிக் கலாச்சாரமும் தலையெடுத்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அதிகரித்திருக்கின்றன. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.

ஒட்டு மொத்த அமைச்சர்களையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்கு அனுப்பிவிட்டு, பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உண்டாக்கி, அதில் தமிழகத்தைத் தள்ளியிருக்கிறது திறனற்ற திமுக அரசு

உடனடியாக, தமிழக அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி வாழ கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. சார்பாக வலியுறுத்துகிறேன்.


Share it if you like it