விடியல் ஆட்சியின் அவலம் குறித்து காணொளி வெளியிட துணிவு இருக்கா?: கே.டி. பிரதர்ஸிடம் நெட்டிசன்கள் கேள்வி!

விடியல் ஆட்சியின் அவலம் குறித்து காணொளி வெளியிட துணிவு இருக்கா?: கே.டி. பிரதர்ஸிடம் நெட்டிசன்கள் கேள்வி!

Share it if you like it

விமான நிலையத்தில் என்ன? நடந்து என்பதை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விளக்கம் கொடுத்த பிறகும் வெட்டி விளம்பரம் தேட முயன்ற தி.மு.க. எம்.பி.யை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

கடந்த ஜனவரி 10-ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற விமானத்தில் பா.ஜ.க. எம்.பி தேஜஸ்வி சூர்யாவுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பயணம் செய்து இருந்தார். இந்த நிலையில், விமானத்தில் அவசர கால கதவை தேஜஸ்வி திறந்ததாக தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் அடிமை ஊடகங்கள் தொடர்ந்து அவதூறு செய்தியை பரப்பி வருகின்றன.

இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யா பத்திரிகையாளர்களிடம் விளக்கம் கொடுத்தனர். எனினும், தி.மு.க.வினர் தொடர்ந்து அவதூறு செய்தியை பரப்பி வருகின்றனர்.

அந்த வகையில், தி.மு.க.வின் மூத்த தலைவரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் சென்னையில் இருந்து கோவைக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அப்போது, பா.ஜ.க.வை கிண்டல் செய்யும் விதமாக அவர் காணொளி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பா.ஜ.க.வை அவதூறு செய்யும் நோக்கில் தி.மு.க. எம்.பி. நேரம் ஒதுக்கி இந்த காணொளியை வெளியிட்டு இருக்கிறார் என்பதை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதேவேளையில், தி.மு.க. ஆட்சியில் நிகழும் அவலங்கள், அடாவடிகள் மற்றும் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு, கொலை, கொள்ளை, திருட்டு, இருட்டு மற்றும் பெண் காவலர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மை, கஞ்சா & மதுவால் தொடர்ந்து சீரழியும் தமிழகத்தின் அவல நிலையையும், ஸ்டாலினின் மோசமான ஆட்சியையும் குறித்து தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் காணொளி வெளியிட துணிவு இருக்கிறதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it