பெண்ணை செருப்பால் அடித்த தி.மு.க.வினர்!

பெண்ணை செருப்பால் அடித்த தி.மு.க.வினர்!

Share it if you like it

முதல்வரிடம் கேள்வி கேட்ட பெண்களை தி.மு.க.வினர் தாக்கியதாக பெண் ஒருவர் வேதனையுடன் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சட்டத்தின் ஆட்சி நடக்கும் என்று வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்தவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இவர், தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு தமிழத்தில் சட்டம், ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை தமிழகம் நன்கு அறியும். பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிராக தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக, பெண் காவலர்களுக்கே போதிய பாதுகாப்பும், உரிய மரியாதையும் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, மாற்று கட்சியை சேர்ந்த பெண் தலைவர்கள் தி.மு.க.வினரால் இழிவுப்படுத்தப்படும் சம்பவங்கள் தொடர் கதையாக இருந்து வருகிறது.

அந்த வகையில், பிரபல நடிகையும் பா.ஜ.க.வின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவருமான காயத்திரி ரகுராமை. தி.மு.க நிர்வாகி ஜெயசந்திரன் என்பவன் மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்து ட்விட்டர் பதிவு செய்து இருந்தான். இவன், மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் பா.ஜ.க.வினர் புகார் தெரிவித்து இருந்தனர். தி.மு.க.வின் முக்கிய புள்ளியின் ஆசி இருப்பதால் இன்று வரை இவன் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பதே நிதர்சனம்.

இப்படியாக, தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும், பெண்களே இந்த ஆட்சியை மிக கடுமையாக விமர்சனம் செய்யும் அவலமும் தொடர் கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரத்தில் உள்ள செங்காடு கிராமத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கிராம சபை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பெண் தூய்மை பணியாளர் ஒருவர் இந்த அரசால் எங்களுக்கு எந்த பலனும் இல்லை என்று வெளிப்படையாக புகார் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் மிக கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழக முதல்வரிடம் பூங்கொடி என்னும் பெண்மணி ஒருவர் கேள்வி கேட்ட ஒரே காரணத்திற்காக, பெண் என்றும் பாராமல் தி.மு.கவினர் அவரை செருப்பால் அடித்தும், வயிற்றில் எட்டி உதைத்தும் மிக கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து, கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்மணி தனக்கும் பூங்கொடி என்பவருக்கும் தி.மு.க.வினரால் ஏற்பட்ட சம்பவங்களை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it