சபரீசனை பஸ்ஸில் விமர்சனம் செய்த சமூக ஆர்வலர்!

சபரீசனை பஸ்ஸில் விமர்சனம் செய்த சமூக ஆர்வலர்!

Share it if you like it

தி.மு.க.வின் ஊழல் ஊழல் பயணி இருவர் பேசிக் கொண்ட காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

தி.மு.க ஆட்சி அமைந்த பின்பு தொடர் மின்வெட்டு, பால் விலையேற்றம், கட்டுமான பொருட்களின் விலையேற்றம், ஊழல், லஞ்சம், பொதுமக்களுக்கு பாதுகாப்பின்மை என சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் தமிழகத்தில் சந்தி சிரித்து வருகிறது. இதுதவிர, கழக கண்மணிகள் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்களின் அட்டூழியங்கள் அடாவடிகள் ஒருபுறம் என்றால், முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கம் மறுபுறம் என தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறது. இதன்காரணமாக, வியாபாரிகள், கட்டுமான தொழில் நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் என பலர் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலினோடு சேர்த்து மொத்தம் மூன்று முதல்வர்கள் தமிழகத்தை ஆள்வதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தி.மு.க.வை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில், ஸ்டாலின் மருமகன் சபரீசனின் ஆதிக்கம் கட்சியிலும், ஆட்சியிலும் அப்பட்டமாக தெரிகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், பேருந்தில் பயணம் செய்த சமூக ஆர்வலர் ஒருவர் சபரீசன் குறித்து பேசியதாவது; ஜி ஸ்கொயர் நிறுவனம் பற்றி அண்ணாமலை மீடியாவில் சொல்லி விட்டார். இப்பொழுது, வேற வேற பெயரில் ஆறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு, சபரீசன் தான் இயக்குனர் என்ன மானங்கெட்ட பிழைப்பு இது பற்றி பேச இங்கு நாதி இருக்கா. அவன் தெளிவா ஊழல் செய்கிறான் என தனது கோவத்தை வெளிப்படுத்தியுள்ளார். இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதன் லிங்க் இதோ.


Share it if you like it