பா.ஜ.க தலைவருக்கு மிரட்டல்… எமனுக்கே எருமை சப்ளை செய்தவராம் இவர்!

பா.ஜ.க தலைவருக்கு மிரட்டல்… எமனுக்கே எருமை சப்ளை செய்தவராம் இவர்!

Share it if you like it

பா.ஜ.க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய காணொளி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் எளிமை, பணிவு, அதிரடி பேச்சு, மற்றும் துணிச்சல் மிக்க நடவடிக்கைகள் காரணமாக அக்கட்சி அரசு வேகத்தில் வளர்ந்து வருகிறது. அந்தவகையில், மாற்று கட்சியை சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். இதுதவிர, இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கூட பா.ஜ.க.வை நோக்கி தங்களது பார்வையை திருப்பியுள்ளனர். இதன் காரணமாக தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பா.ஜ.க தலைவரை தொடர்ந்து மிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், கழக உடன் பிறப்பு ஒருவர் அண்ணாமலைக்கு மிரட்டல் விடுத்து இவ்வாறு பேசியுள்ளார் ;

பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு ஒரு வேண்டுகோள். உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை தராதரம் இல்லை என்று சொல்லுற நீ இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் நில்லு. உன்னை எதிர்த்து எங்கள் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் ஜெயிப்பார். அப்படி அவர் தோற்றால் நான் தூக்கு போட்டு தொங்குவேன். அண்ணாமலை நாங்கள் எல்லாம் எமனுக்கே எருமையை சப்ளை செய்பவர்கள் இதோடு பேச்சை நிறுத்திக் கொள் என்று கூறியுள்ளார். உலகிலேயே மிகப்பெரிய கட்சி பா.ஜ.க. இதற்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மிகுந்த செல்வாக்கு உண்டு. கும்மிடிப்பூண்டியை தாண்டினால் தி.மு.க.வை யாருக்கும் தெரியாது. குறிப்பாக, உதயநிதி ஸ்டாலினை யாரென்றே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

எருமையை சப்ளை செய்பவர் பேசிய வீடியோ லிங்க் இதோ.


Share it if you like it