சாலையில் கிடக்கும் சடலம்: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு!

சாலையில் கிடக்கும் சடலம்: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு!

Share it if you like it

பட்ட பகலில் படுகொலை செய்யப்பட்டவரின் சடலம் ஒன்று சாலையின் ஓரம் கிடக்கும் காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு பொதுமக்கள் அச்சத்துடனும், பயத்துடனும் வாழும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு, சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது என்பதே நிதர்சனம். சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த தி.மு.க. வட்டச் செயலாளர் செல்வம் சமீபத்தில் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, ரேஷன் அரசி கடத்தப்படுவதாக காவல்துறையில் புகார் தெரிவித்த நபர், மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டது என தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

அந்தவகையில், சென்னையில் பட்டபகலில் நடுரோட்டில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். அவரின் சடலம் சாலையின் ஒரத்தில் கிடப்பது போன்ற காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இக்காணொளியை பிரபல அரசியல் விமர்சகர் செல்வ குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் லிங்க் இதோ.


Share it if you like it