நீயா… நானா..? மேயர் – எம்.எல்.ஏ டிஷ்யூம்!

நீயா… நானா..? மேயர் – எம்.எல்.ஏ டிஷ்யூம்!

Share it if you like it

திருப்பூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மேயர் மற்றும் எம்.எல்.ஏ போட்டி போட்டுக் கொண்டு பேட்டி கொடுத்த காணொளி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 4-ம் தேதி திருப்பூர் மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டவர் தினேஷ்குமார். பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்னர், முதல் நிகழ்ச்சியாக தென்னம்பாளையத்தில், கழிவு நீர் கால்வாயை தூர் வாரும் பணி துவங்கி, வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில், தி.மு.க-வின் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்பு, மேயர் மற்றும் எம்.எல்.ஏ கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். மேயரிடம் நிருபர்கள் சில கேள்விகளை கேட்டனர். அப்பொழுது, எம்.எல்.ஏ முந்திக் கொண்டு அதற்கு பதில் கூறினார். மேலும், தினமும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என மேயர் கூறியுள்ளார். ‘ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் குடிநீர் வழங்கப்படும்’ என்று இடைமறித்து எம்.எல்.ஏ பதில் அளித்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்காணொளி தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.


Share it if you like it