முன்னறிவிப்பின்றி கொளத்தூர் தொகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்த திமுக அரசு – கதறி அழுத பெண்கள்..!

முன்னறிவிப்பின்றி கொளத்தூர் தொகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்த திமுக அரசு – கதறி அழுத பெண்கள்..!

Share it if you like it

தமிழக முதல்வரின் கொளத்தூர் தொகுதி மக்கள் குற்றச்சாட்டு.

இரண்டு முறைக்கு மேல் கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ-வாக ஸ்டாலின் இருந்தும் கூட முறையான உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளாத காரணத்தினால் தான் சமீபத்தில் பெய்த கனமழையில் கொளத்தூர் தொகுதி மக்கள் கடும் இன்னல்களையும், அவதியையும், அடைந்தார்கள் என பா.ஜ.க உட்பட பல எதிர்க்கட்சிகள் தி.மு.க அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

எங்களுக்கு முறையான நிவாரண உதவிகள் கூட கிடைக்கவில்லை என தமிழக முதல்வர் மீதே அத்தொகுதி மக்கள் தங்கள் கோவத்தை வெளிப்படுத்தி இருந்ததை பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு இருந்த நிலையில் கொளத்தூர் தொகுதி ஔவையார் நகரை சேர்ந்த மக்களுக்கு எந்தவித முன்னறிவிப்பையும் வழங்காமல் ஏழை, எளிய மக்களின் வீடுகளை தி.மு.க அரசு இடித்து தள்ளி வருவதற்கு பலர் தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it