ஓங்கோலில் இருந்து வந்தது முதல் தற்போது வரை… ஸ்டாலின் குடும்பத்தை தூர்வாரிய சாமானிய தமிழன்!

ஓங்கோலில் இருந்து வந்தது முதல் தற்போது வரை… ஸ்டாலின் குடும்பத்தை தூர்வாரிய சாமானிய தமிழன்!

Share it if you like it

திராவிட மாடல் ஆட்சி குறித்து சாமானியன் ஒருவரிடம் தனியார் யூடியூப் சேனல் ஒன்று கேள்வி எழுப்பிய நிலையில், ஓங்கோலில் இருந்து வந்தது முதல் தற்போது வரையிலான ஸ்டாலின் குடும்பத்தை தூர்வாரி இருக்கிறார் சாமானிய தமிழன் ஒருவர்.

தனியார் யூடியூப் சேனல் நடத்துபவர்கள், தங்களது சேனல் பப்ளிசிட்டிக்காக அவ்வப்போது பொதுமக்களிடம் பேட்டி காண்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதில், சில பேட்டிகள் மக்கள் மத்தியில் வெகுவாக ஈர்க்கப்பட்டு வைரலாவது வழக்கம். அந்த வகையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்று திராவிட மாடல் ஆட்சி குறித்து பொதுமக்களில் ஒருவரை பேட்டி எடுக்க, அவரோ ஆந்திர மாநிலம் ஓங்கோல் கிராமத்தில் இருந்து ஒன்றரை வயது குழந்தையாக கருணாநிதி வந்தது முதல் தற்போது வரை தூர்வாரி தூற்றி எடுத்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் பேசும் நபர், திராவிட மாடல் அல்ல திருடன் மாடல் என்று கூறியதோடு, கடந்த 1922-ம் ஆண்டு கருணாநிதி ஒன்றரை வயது குழந்தையாக இருந்தபோது ஓங்கோலில் இருந்து தமிழகத்திற்கு மேளம் அடித்துக் கொண்டு வந்தார்கள். இன்று கருணாநிதி குடும்பத்தின் சொத்து 24 லட்சம் கோடி, ஒரு ஏரோபிளேன், 4 ரோல்ஸ்ராய் கார்கள் என குவித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், நம்மாள் எவனாச்சும் ஒருத்தன் உனக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்று கேட்டிருக்கிறானா? என்று கேள்வி எழுப்பியதோடு, பல்வேறு தகவல்களையும் புட்டுப்புட்டு வைத்திருக்கிறார்.

கருணாநிதி குடும்பத்தைப் பற்றி அந்த நபர் இன்னும் என்னவெல்லாம் சொன்னார் என்பதை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை கிளிக் செய்யுங்கள்…


Share it if you like it