ஊனமுற்ற மகனுக்காக உதவி கேட்ட பெண்ணை   பாலியல் துன்புறுத்திய திமுக பிரமுகர் !

ஊனமுற்ற மகனுக்காக உதவி கேட்ட பெண்ணை பாலியல் துன்புறுத்திய திமுக பிரமுகர் !

Share it if you like it

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கஸ்தூரி நகரில் வசித்து வருபவர் சரோஜா. இவருடைய கணவர் இறந்து 10 வருடம் ஆகியுள்ள நிலையில் அன்றாட கூலி வேலை செய்து தனது ஊனமுற்ற மகன் மற்றும் மகள்களை காப்பாற்றி வருகிறார். மேலும் அதே பகுதியில் காந்திநகரை சேர்ந்த திமுக பிரமுகர் பிரபு என்பவரை சந்தித்து தனது ஊனமுற்ற மகனுக்கு மிதிவண்டி அல்லது வேறு ஏதேனும் உதவி செய்யுமாறு சரோஜா கேட்டுக்கொண்டுள்ளார். உடனே அப்பெண்ணின் போன் நம்பரை வாங்கி கொண்டு நான் உதவி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் திமுக பிரமுகர் பிரபு அப்பெண் சரோஜாவுக்கு அடிக்கடி போன் செய்தும் வீடியோ கால் செய்தும் ஆபாச வார்த்தைகளை கூறியும் பாலியல் ரீதியாக தொல்லை செய்துள்ளார். மேலும் ஆபாசமான காணொளிகளை அப்பெண்ணிற்கு அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திமுக நபரின் நம்பரை பிளாக் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திமுக பிரமுகர் பிரபு தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் கடும் மன உளச்சலுக்கு ஆளான சரோஜா, ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

https://x.com/ThanthiTV/status/1712716579287536054?s=20


Share it if you like it