பாண்டே எழுப்பிய சரமாரி கேள்வி: திணறிய தி.மு.க. எம்.பி.!

பாண்டே எழுப்பிய சரமாரி கேள்வி: திணறிய தி.மு.க. எம்.பி.!

Share it if you like it

பிரபல யூ டியூப்பர் ரங்கராஜ் பாண்டேவிடம் தி.மு.க. எம்.பி. செந்தில் குமார் சிக்கி திணறிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர், நெறியாளர் என பன்முக தன்மை கொண்டவர் ரங்கராஜ் பாண்டே. இவர், சாணக்யா இணையதள ஊடகத்தின் நிறுவனராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கில் யாருக்கு ஓட்டு? என்ற தலைப்பில் தனது ஊடகத்தில் விவாதம் ஒன்றை நடத்தினார். இதில், பா.ஜ.க. மூத்த தலைவர் கே.பி. ராமலிங்கம், அ.தி.மு.க.வை சேர்ந்த வைகை செல்வன் மற்றும் தி.மு.க. எம்.பி செந்தில் குமார் ஆகியோர் பங்கு பெற்றனர்.

அந்த வகையில், தி.மு.க. எம்.பி. செந்தில் குமாரிடம் நெறியாளர் ரங்கராஜ் பாண்டே பேசும் போது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இதற்கு, பதில் சொல்ல முடியாமல் தி.மு.க. எம்.பி. திணறியுள்ளார். இந்த, காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it