தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல் நடப்பது உண்மையென பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையாக்ஃ மாறியுள்ளது.
தமிழகத்தில், வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடப்பதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், பிரபல அரசியல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கூறியதாவது ;
இந்த சம்பவங்கள் உண்மையானவை, இதனை யாரும் புறக்கணிக்க கூடாது. “இவை போலியான வீடியோக்கள் என்று பீகார் துணை முதல்வர் கூறுகிறார். வெகு விரைவில், உண்மையான வீடியோவை நான் வெளியிடுவேன். சில பத்திரிகையாளர்கள் தவறான வீடியோவைப் பகிர்ந்துள்ளனர் அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.