பாரதப் பிரதமரை புகழ்ந்து தள்ளிய தி.மு.க அமைச்சர்!

பாரதப் பிரதமரை புகழ்ந்து தள்ளிய தி.மு.க அமைச்சர்!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பாராட்டி பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

டீக்கடை வைத்திருந்த மோடி இன்று பிரதமர் பதவில் இருக்கிறார், உழைப்பு இருந்தால் யார் வேண்டுனாலும் மேல உயரலாம் என பிரதமரை உதாரணம் காட்டி தி.மு.க.வின் நீர்வளத்துறை அமைச்சரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன் பேசியுள்ளார். அமைச்சரின் கருத்து தி.மு.க.வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்காணொளி, தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

இதையடுத்து, இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் தி.மு.க.வின் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான பாரிவேந்தர். நேற்றைய தினம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும் பொழுது, காந்தியைப் போலவே மோடியும் தேச பக்தி மிகுந்தவர். ஆகவே, மோடியும் காந்தியும் ஒன்று என குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தான், பாரதப் பிரதமர் மோடியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் வாழ்விற்காக இரவு பகல் என்று பாராமல் அரும்பாடுபட்டு வரும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் போன்றவர்களை எல்லாம் உதாரணம் காட்டி பேசாமல், பாரதப் பிரதமரை குறிப்பிட்டு பேசிய துரைமுருகனுக்கு நிச்சயம் ’தில்’ வேண்டும் என சமூகவலைத்தள வாசிகள் அமைச்சர் துரைமுருகனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it