அடாவடி நாசரை நாறாடிக்கும் நெட்டிசன்கள்!

அடாவடி நாசரை நாறாடிக்கும் நெட்டிசன்கள்!

Share it if you like it

கட்சி தொண்டரை கல்லை கொண்டு தாக்க முயன்ற பால்வளத்துறை அமைச்சர் நாசரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

திருவள்ளூரில் முதல்வர் விழா தொடர்பான ஆய்வுக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் சென்றிருந்தார். அப்போது, அங்கிருந்த தொண்டர்களிடம் நாற்காலி எடுத்து வருமாறு கூறியுள்ளார். ஆனால், அவர்கள் நாற்காலிகளை எடுத்துவர தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், குறைந்த எண்ணிக்கையில் நாற்காலிகளை எடுத்து வந்தனர். இதானல், ஆத்திரமடைந்த அமைச்சர், கீழே கிடந்த கல்லை எடுத்து, தொண்டரை நோக்கி எறிந்தார். மேலும், வேகமாக நாற்காலிகளை எடுத்து வரும்படி அவர்களை நோக்கி கடும் கோபத்தில் கத்தினார். அமைச்சரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் எதிர்க்கட்சிகள் அமைச்சரின் கீழ்த்தரமான செயலை கண்டித்து இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில், அமைச்சரை கிண்டல் செய்யும் விதமாக, மீம்ஸ் கிரியேட்டர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது கற்பனை திறனை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image
Image

Share it if you like it