தி.மு.க எம்.பி. சர்ச்சை கருத்து… நயினார் நாகேந்திரன் மாஸ் பதிலடி!

தி.மு.க எம்.பி. சர்ச்சை கருத்து… நயினார் நாகேந்திரன் மாஸ் பதிலடி!

Share it if you like it

தி.மு.க எம்.பி. ஆ.ராசாவின் கருத்திற்கு பதிலடி கொடுத்து உள்ளார் பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார். ஆனால், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட தி.மு.க அதில் இருந்து விலகி ஜனநாயகத்துக்காக, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் சொல்லிக் கொள்கிறேன்; அண்ணா வழியில் செல்லும் எங்களை பெரியார் வழியில் செல்ல வைத்து விடாதீர்கள். ’தனிநாடு கேட்க வைத்து விடாதீர்கள்’ என நாமக்கல் மாநாட்டில் நீலகிரி எம்பி ஆ.ராசா சர்ச்சைக்குறிய வகையில் பேசி இருந்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆ.ராசாவின் பேச்சை உடனடியாக கண்டிக்க வேண்டும் இல்லையேல் ஆ.ராசாவின் பேச்சு தமிழக அரசின் நிலைப்பாடாக கருதப்படும் என தமிழக பா.ஜ.க மூத்த தலைர் ஹெச்.ராஜா தனது கடும் கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். இதுதவிர, பிரிவினையை தூண்டும் வகையில் பேசிய தி.மு.க எம்.பிக்கு பலர் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க துணைத் தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தனித் தமிழ்நாடு கோரி இருப்பது, அவரது தனிப்பட்ட கருத்து. என் ஆசை, தமிழகத்தை நிர்வாக வசதிக்காக பாண்டியநாடு, பல்லவநாடு என பிரிக்கலாம். இரண்டு நாடுகளிலும், பா.ஜ.க.வோ அல்லது அதன் கூட்டணி கட்சியோ ஆட்சியில் இருக்கும் என ஆ.ராசாவிற்கு பதிலடியை கொடுத்து இருக்கிறார்.


Share it if you like it