மக்கள் வரிப்பணத்தில் கட்டும் பொது இடங்களுக்கு திமுக தலைவர்களின் பெயரை வைக்காமல், சுதந்திர போராட்ட தலைவர்களின்  பெயரை வைக்க வேண்டும் !

மக்கள் வரிப்பணத்தில் கட்டும் பொது இடங்களுக்கு திமுக தலைவர்களின் பெயரை வைக்காமல், சுதந்திர போராட்ட தலைவர்களின் பெயரை வைக்க வேண்டும் !

Share it if you like it

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முதலைப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு தீரன் சின்னமலை பெயரை வைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :-

நாமக்கல் நகர்மன்ற கூட்டத்தில், நாமக்கல் முதலைப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பெயர் வைக்கவும், வெளிப்புற வட்ட சாலை சந்திப்பு மற்றும் அணுகுசாலை சந்திப்புக்கு, அண்ணா நினைவு வளைவு அன்பழகன் நினைவு வளைவு என பெயர் வைக்கவும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

திமுகவினர் நடத்தும் நிறுவனங்களுக்கு எல்லாம் திமுகவின் மறைந்த கட்சித் தலைவர்கள் பெயரை வைக்காமல், மக்கள் வரிப்பணத்தில் கட்டும் பொது இடங்கள் ஒவ்வொன்றிற்கும், திமுக தலைவர்களின் பெயர் சூட்டும் வழக்கம் இனியும் தொடரக் கூடாது.

சுதந்திரத்துக்காகப் போராடிய வீரர்கள், தலைவர்கள் பெயரை எல்லாம் புறக்கணித்துவிட்டு, திமுக தலைவர்களின் பெயர்களை வைக்க ஒரு அவசரக் கூட்டம் நடத்தி முடிவெடுப்பது நகைப்புக்குரியது.

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தைப் பொறுத்தவரை, பேருந்து நிலையத்துக்கு சுதந்திரப் போராட்ட வீரர், தீரன் சின்னமலை அவர்களது பெயர் சூட்ட வேண்டும் என்றும், வளைவுகளுக்கு, அவரது தளபதி பொல்லான் உள்ளிட்ட வீரர்களின் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலிறுத்துகிறேன். இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it