அண்ணாமலை ஆடு மேய்த்தும், வானதி தேங்காய் மட்டை பொறுக்கியும் இருப்பார்கள்… ஆ.ராசா திமிர் பேச்சு!

அண்ணாமலை ஆடு மேய்த்தும், வானதி தேங்காய் மட்டை பொறுக்கியும் இருப்பார்கள்… ஆ.ராசா திமிர் பேச்சு!

Share it if you like it

கருணாநிதியின் பேனா இல்லையென்றால் அண்ணாமலை ஆடு மேய்த்துக் கொண்டிருப்பார். வானதி தேங்காய் மட்டை பொறுக்கிக் கொண்டிருப்பார். எடப்பாடி பழனிசாமி வெல்லமண்டி வைத்திருப்பார் என்று தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, மீண்டும் திமிராகப் பேசியிருக்கிறார்.

தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளராக இருப்பவர் 2ஜி புகழ் ஆ.ராசா. தற்போது நீலகிரி தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் இவர், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஏலம் விவகாரத்தில் 2,75,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு. இவ்வழக்கு தற்போது மேல் முறையீட்டில் இருந்து வருகிறது. இது தவிர, ஆ.ராசா மீது பல்வேறு புகார்கள் உள்ளன. உதாரணமாக, கட்சியினரை மதிப்பதே இல்லை. குருநில மன்னரைப் போல நடந்துகொள்கிறார் என்று தி.மு.க.வினரே புகார் கூறி வருகிறார்கள். தவிர, வாய்துடுக்காக பேசுவதிலும் ஆ.ராசாவுக்கு நிகர் ஆ.ராசாதான்.

2021 சட்டமன்றத் தேர்தலின்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தைகளை பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்த விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கவே, நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்று அந்தர்பல்டி அடித்தார். அதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆ.ராசா, ஹிந்துக்கள் என்றாலே விபசாரியின் மகன் என்று சொல்லி, ஹிந்து பெண்களை கேவலப்படுத்தினார். இதுவும் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதேபோல, சமீபத்தில்கூட காமராஜரை மிகவும் தரக்குறைவாக பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்து நாடார் சமூகத்தினர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், ஒரு முன்னாள் முதல்வர், ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி, ஒரு வழக்கறிஞர் ஆகியோரை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்திருக்கிறார். அதாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு எதிர்வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு, தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, கரட்டாங்காடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆ.ராசா பேசினார். அப்போது, “கருணாநிதியின் பேனா சிலைக்கு 80 கோடி ரூபாயா என்று கேட்கிறார்கள் பா.ஜ.க.வினரும், அ.தி.மு.க.வினரும்.

எடப்பாடி பழனிசாமி பி.ஏ. படித்திருக்கிறார். வானதி சீனிவாசன் வழக்கறிஞருக்கு படித்திருக்கிறார். அண்ணாமலை ஐ.பி.எஸ். படித்திருக்கிறார் என்று சொன்னார்கள். உங்களை எல்லாம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது கருணாநிதியி அந்த பேனாதான். அந்தப் பேனா இல்லை என்றால் அண்ணாமலை ஆடு மேய்த்துக் கொண்டிருப்பார். வானதி சீனிவாசன் தென்னந்தோப்பில் தேங்காய் பொறுக்கிக் கொண்டிருப்பார். எடப்பாடி பழனிசாமி வெல்லமண்டி வைத்திருப்பார். பி.ஏ. படித்திருக்க மாட்டார். ஜெயலலிதாவும் திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டார். கருணாநிதியின் அந்தப் பேனா இல்லை என்றால் இது எதுவுமே இல்லை” என்று கூறியிருக்கிறார்.

ஆ.ராசாவின் இந்த பேச்சுதான் தற்போது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பல்வேறு தரப்பினரும் ஆ.ராசாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தின் முன்னாள் முதல்வரையும், ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியையும் ஆ.ராசா இவ்வாறு பேசியது அவர் வகிக்கும் எம்.பி. பதவிக்கு மிகவும் இழுக்கானது என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.


Share it if you like it