பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கல்குவாரி ஏலத்திற்கான ஒப்பந்தப் புள்ளி கொடுக்க வந்த பாஜகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடும் தாக்குதல் நடத்திய திமுக ரவுடி கும்பலை உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழக பாஜக சார்பில் மாநிலப் பொதுச் செயலாளர் அண்ணன் கருப்பு முருகானந்தம் தலைமையில், நவம்பர் 3ஆம் தேதி பெரம்பலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.