தினேஷ் மரணத்திலும் மெளனம் கணேஷ் தற்கொலையிலும் மெளனம் தொடர்ந்து கள்ள மெளனம் காக்கும் குரல் அற்றவர்களின் குரல்..!

தினேஷ் மரணத்திலும் மெளனம் கணேஷ் தற்கொலையிலும் மெளனம் தொடர்ந்து கள்ள மெளனம் காக்கும் குரல் அற்றவர்களின் குரல்..!

Share it if you like it

ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், நெறியாளர்கள், என்னும் போர்வையில் தி.மு.க-விற்கு இன்று வரை ஆதரவாக நடந்து கொள்ளும் நபர்களே அதிகம் உள்ளனர் என்பது அனைவரின் கருத்தாக இன்று வரை இருந்து வருகிறது. ஏழை, எளியவர்களுக்கு, அநீதி இழைக்கப்பட்டால் நிச்சயம் குரல் கொடுப்பேன் என்று குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் என்று தொடர்ந்து பேசி வருபவர் நெறியாளர் செந்தில். தி.மு.க ஆட்சியில் நிகழ்ந்த மூன்று கொடூர சம்பவங்களுக்கு இன்று வரை குரல் கொடுக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருவது மக்கள் மத்தியில் கோவத்தை ஏற்படுத்தி வருகிறது.

  • தி.மு.க அமைச்சர் பொன்முடியை வரவேற்கும் திருமண நிகழ்ச்சியில்.  கொடிக்கம்பம் நடும் பணியில் 13-வயது உடைய தினேஷ் என்னும் சிறுவன் ஈடுபட்ட பொழுது மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவத்திற்கு மெளனம்.
  • முதல்வர் வீட்டின் முன்பு தீ குளித்து சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த வெற்றிமாறனுக்கு கூட குரல் கொடுக்காமல் மெளனம்.
  • அப்பாவை குடிக்க வேண்டாம்ணு சொல்லுங்க என்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட +1 மாணவனின் மரணத்திற்கு நீதி வேண்டும் உடனே மதுக்கடைகளை மூட தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்காமல் அதே கள்ள மெளனம்.

தி.மு.க மற்றும் கழக முன்னோடிகள், மூத்த நிர்வாகிகள், மற்றும் அக்கட்சியினர் செய்யும் அட்டூழியங்கள், அடாவடிகள், குறித்து எல்லாம் பேசாமல். இவர் எந்த குரல் அற்றவர்களுக்கு குரல் கொடுக்க போகிறார் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it