சஸ்பெண்டாகியும் திருந்தவில்லை… மீண்டும் கவர்னர், குஷ்புவை இழிவாக பேசிய தி.மு.க. ஆபாச பேச்சாளர்!

சஸ்பெண்டாகியும் திருந்தவில்லை… மீண்டும் கவர்னர், குஷ்புவை இழிவாக பேசிய தி.மு.க. ஆபாச பேச்சாளர்!

Share it if you like it

ஏற்கெனவே கவர்னரை இழிவாக பேசியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கவர்னரையும், குஷ்புவையும் இழிவாக பேசியிருக்கிறார் தி.மு.க. ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.

தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர்களில் ஒருவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசுவதில் வல்லவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சட்டமன்றத்தில் தி.மு.க. கொடுத்த உரையில் சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி படித்தது நினைவிருக்கலாம். அப்போது, கவர்னரை ஒருமையிலும், ஆபாச வார்த்தைகளாலும் திட்டியதோடு, உயிரோடு போக முடியுமா என்று கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியவர் இந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்திதான்.

இச்சம்பவம் தொடர்பாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், கட்சியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர், சமீபத்தில் கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஆகவே, அவர் வகித்து வந்த துறையை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துச்சாமி ஆகியோருக்கு கூடுதலாக வழங்கவும், செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கவும் அனுமதி கோரி தமிழக அரசு சார்பில் கவர்னருக்கு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தங்கம் தென்னரசு, முத்துச்சாமிக்கு துறைகளை பிரித்து வழங்குவதற்கு ஒப்புதல் அளித்த கவர்னர், செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க அனுமதி வழங்கவில்லை. இதனால், தமிழக அரசே அரசாணை பிறப்பித்தது. இந்த சூழலில், சென்னையில் தி.மு.க. சார்பில் மேற்படி விவகாரத்தை வைத்து கவர்னரை மீண்டும் இழிவாக பேசியிருக்கிறார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. அதோடு, நடிகையும், மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவையும், பெண்களையும் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் ஆபாசமாகப் பேசியிருக்கிறார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் ஆபாச பேச்சு வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது…


Share it if you like it