ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களிடம் பா.ஜ.க தலைவரின் கருத்து கேள்வி எழுப்பிய பொழுது பத்திரிக்கையாளர்களிடம் கடிந்து கொண்ட அமைச்சர்..
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தி.மு.க அமைச்சர்கள் தங்கள் துறைகளில் செய்த தவறுகளை கண்டு பிடித்து நாட்டு மக்களுக்கு உடனுக்கு உடன் தெரிவிப்பதுடன் அதற்குறிய ஆதாரத்தையும் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்தும் வருகிறார்.
மின்சாரத்தில் நடந்த ஊழல் புகார், அரசு ஊழியர்களுக்கு இனிப்பு கொள்முதல் செய்வதில் நடந்த ஊழல் புகார், என தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை அண்ணாமலை விடியல் அரசு மீது சுமத்தி வரும் நிலையில். தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் கடிந்து கொண்ட காணொலி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.