உத்தர பிரதேசத அரசை விட தமிழக அரசு தான் அதிக கடன் வாங்கியுள்ளதாக வழக்கறிஞரும் பிரபல அரசியல் விமர்சகருமான அக்கினிஸ்வரன் பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ 2,00, 000-க்கும் மேல் கடன் உள்ளது என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் வெள்ளையறிக்கை வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து, நடந்தது என்ன? 2,500 கோடியில் சென்னையில் பூங்கா. 100 கோடி-யில் ஈ.வெ.ரா-விற்கு சிலை, 39 கோடியில் கலைஞருக்கு நினைவிடம். இப்படியான, ஆலோசனைகளை சொல்ல தான் முதல்வருக்கு 5 பொருளாதார நிபுணர்கள் நியமனம் செய்யப்பட்டார்களா? என்று எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இதுகுறித்து எல்லாம் கவலைப்படாமல் வழக்கம் போல, சைக்கிள் ஓட்டுவது, டீ குடிப்பது, ஜிம்மில் ஒர்க் அவுட், செய்வது என தனது நேரத்தை முதல்வர் செலவழித்து வருகிறார் என நெட்டிசன்கள் இந்த அரசை தும்சம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல ஊடகமான புதிய தலைமுறை அண்மையில் ஊடக விவாதம் ஒன்றினை ஏற்பாடு செய்து இருந்தது. இதில், பிரபல அரசியல் விமர்சகர் அக்கினஸ்வரன் கலந்து கொண்டு பேசிய பொழுது இவ்வாறு கூறியிருந்தார். உத்தரபிரதேசத்தில் 23 கோடி மக்களுக்கு 6 லட்சத்து 11 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் 8 கோடி மக்களுக்கு 6 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது என புள்ளி விவரத்துடன் தி.மு.க.வை வெளுத்து வாங்கியுள்ளார். இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.


