இந்துமுன்னணி பொறுப்பாளரின் கை உடைப்பு…தென்காசியில் பதற்றம்!

இந்துமுன்னணி பொறுப்பாளரின் கை உடைப்பு…தென்காசியில் பதற்றம்!

Share it if you like it

தென்காசியில் இந்துமுன்னணி பொறுப்பாளர்களிடம் தமிழக காவல்துறை அடக்குமுறையை கையாண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஹிந்துக்களின் நிலைமை படுமோசமாக இருக்கும். அதனைமெய்ப்பிக்கும் வகையில், பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தி.மு.க. ஆட்சியில் 100-க்கும் மேற்பட்ட ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுகுறித்தான, காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். இப்படிப்பட்ட சூழலில் தான், ஹிந்துக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கமாக இருப்பது இந்துமுன்னணி. இந்த, அமைப்பு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளது ;

கோவிலை காக்கும் போராட்டம்.. இந்துமுன்னணி பொறுப்பாளரின் கை உடைப்பு. சங்கரன்கோவிலில், இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் கி.வீரமணி அவர்கள் பொதுக்கூட்டத்தை, கோவிலுக்கு அருகில் நடத்த வேண்டாம் என்று அறவழியில் போராடிய பக்தர்கள் மற்றும் இந்துமுன்னணியினர் மீது காவல்துறை கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share it if you like it