கருணாநிதி சமாதியில் ‘ச்’… ‘ச்’.. நெட்டிசன்கள் படையல்!

கருணாநிதி சமாதியில் ‘ச்’… ‘ச்’.. நெட்டிசன்கள் படையல்!

Share it if you like it

கருணாநிதி சமாதியில் முயற்ச்சி என்று அச்சுப்பிழை ஏற்பட்டு இருப்பதை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

தமிழ் மொழிக்காக அதிகம் பாடுபட்டவர் கருணாநிதி என தி.மு.க.வினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். எனினும், அந்த கட்சியை சேர்ந்தவர்களே தமிழ் மொழியை தொடர்ந்து அழித்து வருகின்றனர் என்பது பலரின் குற்றச்சாட்டு. அதனைமெய்ப்பிக்கு வகையில், நேற்றைய நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு சொல்லலாம். அதாவது, நேற்றைய தினம் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அந்தவகையில், முதல்வர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதிக்கு மரியாதை செலுத்த சென்றார். அப்போது, ‘முயற்சி’ என்பதற்கு பதில் ‘ச்’ சேர்த்து அச்சுப்பிழையுடன் முயற்ச்சி என்ற வாசகம் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதனை தான், நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Image

Share it if you like it