தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மேசமாகி கொண்டே செல்வதை ஊடகங்கள், பத்திரிக்கைகள் வாயிலாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதன் தொடர்ச்சியாக தி.மு.க-வை சேர்ந்த இரு எம்.பிக்கள் மீது கிளம்பி இருக்கும் பகீர் குற்றச்சாட்டு சிறந்த உதாரணம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. விடியல் ஆட்சியில் நடக்கும் அவலங்கள் குறித்தும், தி.மு.க நிர்வாகிகள் செய்யும் அட்டூழியங்கள் குறித்தும் மு.க பணியாளர்கள் உட்பட எந்த ஒரு முன்னணி ஊடகங்களும் செய்தி வெளியிடாமல் இருப்பது சகப்பான உண்மை. இந்நிலையில் பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் அவர்கள் தமிழக ஊடகங்களின் முகத்திரையை கிழிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு உள்ளார்.