தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பு சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை தமிழக மக்கள் தற்பொழுது நன்கு உணர்ந்து உள்ளனர். அப்பாவி கூலி தொழிலாளி கொலையில் தி.மு.க கைது, பா.ஜ.க நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்த்திய மற்றொரு தி.மு.க எம்.பி மீது FIR என தொடர்ந்து தமிழக மக்கள் அச்சத்துடனும், பயத்துடனும், வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்பது நிதர்சனம். தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு மோசமாகி கொண்டே செல்லும். இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் நிகழும் குழப்பமான சம்பவங்கள் குறித்த அறிக்கையை ஆளுநர் ஆர்.என் ரவி அவர்களிடம் பா.ஜ.க மூத்த தலைவர்களுடன் நேரில் சென்று அறிக்கையை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.