நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் தி.மு.க நிர்வாகிகளின் அட்டூழியங்கள், அடாவடிகள், எல்லை மீறி வரும் இவ்வேளையில், தி.மு.க கூட்டணியின் வெற்றி மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தி.மு.க-வின் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் அவர்கள் abp நாடு என்னும் பிரபல இணையதள ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் பொழுது, நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு மழுப்பலாகவும், சிரித்து கொண்டும் காசு கொடுத்து தான் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்று அவர் அளித்த பேட்டி காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.