திருப்பூரில் அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்த அதிர்ச்சி தகவலை பிரபல ஊடகம் டைம்ஸ் நவ் வெளியிட்டு இருந்தது. ஏழை குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றி துளியும் கவலைப்பாடமல் அழுகிய முட்டைகளை வழங்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து இருந்த நிலையில். பிரபல அரசியல் விமர்சகர் மத்திய உணவுத் திட்டத்திற்காக மத்திய அரசிடம் 120 கோடி வாங்கிய பிறகும் அழுகிய முட்டையைப் பிள்ளைகளுக்குக் கொடுத்ததுள்ளது ஏன் என தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதாரத்தை வெளியிட்டு கேள்வி எழுப்பி உள்ளார்.