முதல்வர் வீட்டின் அருகே தீக்குளித்த பறையர் பேரவைத் தலைவர் சாவு..
சென்னை செனடாப் சாலையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு வெற்றிமாறன் என்பவர் கடந்த 27 -ஆம் தீக்குளித்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக தீயை அணைத்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். 40 சதவீதம் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்து உள்ளார். இவர் பறையர் பேரவைத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : abp நாடு