நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விடியல் உண்டு என்று பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கிய தி.மு.க-வின் சாயம் மெல்ல மெல்ல வெளுக்க ஆரம்பித்ததை கண்டு மக்கள் தற்பொழுது கடும் அதிர்ச்சி அடைய துவங்கியுள்ளனர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
- நீட் தேர்வு ரத்து இல்லை
- மகளிருக்கு 1000 ரூபாய் இல்லை
- டீசல் விலை குறைப்பு இல்லை
- பழைய ஓய்வூதியத்துக்கு வாய்ப்பு இல்லை
என தொடர்ந்து சிக்ஸர் மேல் சிக்ஸர் அடித்து கொண்டு வரும் நிலையில், ஆட்சிக்கு வந்தால் செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று கூறிய தி.மு.க தற்பொழுது செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை அமைச்சர் கூறியுள்ளார். இது குறித்து பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் அவர்கள் தனது டுவிட்டர் பதிவில் தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையோடு ஆதாரத்தை வெளியிட்டு உள்ளார்.