கள்ளக்குறிச்சியில் குறவர் சமுதாய மக்களை அடித்து துன்புறுத்திய போலீசார்..!

கள்ளக்குறிச்சியில் குறவர் சமுதாய மக்களை அடித்து துன்புறுத்திய போலீசார்..!

Share it if you like it

கள்ளக்குறிச்சியில் குறவர் சமுதாய மக்களை அடித்து துன்புறுத்தியதாக போலீசார் மீது புகார்

கள்ளக்குறிச்சியை சேர்ந்த பிரகாஷ், செல்வம், தர்மராஜ் , பரமசிவம் மற்றும் சக்திவேல் ஆகியோரை 3 நாட்களுக்கு முன்பு போலீசார், இரவு வீடு புகுந்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்கள். செல்வம் மற்றும் பரமசிவம் விடுவிக்கப்பட்ட நிலையில், மற்ற மூவரும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது நகை திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரகாஷ், தர்மராஜ் மற்றும் சக்திவேல் ஆகியோர் காவல் நிலையத்தில் கொடுமைப்படுத்தப்பட்டதாக பிரகாஷின் மனைவி புவனேஸ்வரி புகார் அளித்துள்ளார். வீட்டிற்கு வந்த போலீசார் ஜாதி பெயரை சொல்லி தங்களை திட்டியதாக பிரகாஷின் மனைவி புவனேஸ்வரி குற்றம் சாட்டியுள்ளார்.

கைது செய்யப்பட்டு 72 மணிநேரத்திற்கு பிறகே பிரகாஷ் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே தர்மராஜின் வீட்டிற்கு வந்த போலீசார், நகையை கேட்டு அவரது மனைவியை மிரட்டியுள்ளார்கள். தர்மராஜை போலீசார் தலைகீழாக தொங்கவிட்டு அடித்துள்ளார்கள். இதனால் செய்யாத குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

கைது செய்யப்படும் போது முறையான வாரண்ட் எதையும் போலீசார் அளிக்கவில்லை. அவர்கள் எங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் எனும் விவரத்தையும் 3 நாட்களுக்கு போலீஸ், அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை என உறவினர்கள் கூறுகிறார்கள். இதுபற்றி முக்கிய ஊடகங்கள், சமூக போராளிகள், சினிமா பட்டாளம், ஜாதி அமைப்புகள், திருமா, திக கோஷ்டிகள், எல்லாருமே அமைதி காக்கிறார்கள். இவர்கள் வாய் திறப்பார்களா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it