பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு மோசம் அடையும் சட்டம், ஒழுங்கு..!

பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு மோசம் அடையும் சட்டம், ஒழுங்கு..!

Share it if you like it

தமிழகத்தில் மோசம் அடையும் சட்டம், ஒழுங்கு.

மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறை அதிகாரி படுகொலை என தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்த நாளில் இருந்தே சட்டம், ஒழுங்கு, நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருவது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பயத்தையும், ஏற்படுத்தி இருக்கும் நிலையில். பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை முந்திச்செல்ல முயன்ற சொகுசு காரில் பயணித்தவர்கள் வழி கிடைக்காத காரணத்தால் அரசுப்பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டியிருக்கும் சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டம், ஒழுங்கை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் முதல்வர் இதற்கு என்ன? சொல்ல போகிறார் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it