தங்கள் நிலத்தை தி.மு.க மாவட்ட செயலாளர் அபகரித்து கொண்டதாக இஸ்லாமிய குடும்பம் ஒன்று குற்றச்சாட்டு.
தென்காசி எம்.பி தனது நிலத்தை அபகரிக்க முயல்வதாக விவசாயி ஒருவரின் குடும்பம். தீ குளிக்க முயன்றதாக சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி வைரலாகி வந்தது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்து உள்ள வளசை பகுதியை சேர்ந்தவர் மைதீன். இவருக்கு சொந்தமான நிலத்தை தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை என்பவர் அபகரிக்க முயல்வதாகவும் தனது நிலத்தை மீட்டு தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியினை தந்தி டிவி வெளியிட்டு உள்ளது.