பத்திரிக்கையாளர்களுக்கு உரிய மரியாதை வழங்காமல் திட்டிய அமைச்சர் நாசர்.. பத்திரிக்கையாளரை திட்டிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பத்திரிக்கையாளர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் தி.மு.க-வை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தொடர்ந்து அவர்களை அவமதித்து வரும் சம்பவம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
- தமிழக வேளாண்துறை அமைச்சர் பத்தரிக்கையாளர் ஒருவரை கிறுக்கு தனமான கேள்வி கேக்காத என்று விமர்சனம் செய்தது.
- நிதியமைச்சர் பி.டி.ஆர் பத்திரிக்கையாளரை கோவமாக திட்டியது.
- பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதல்வர் எச்சில் துப்பிய சம்பவம்.
- தி.மு.க MP தயாநிதி மாறன் பத்திரிக்கையாளரை ஒருமையில் விமர்சனம் செய்தது.
என பத்திரிக்கையாளர்களுக்கு உரிமரியாதை வழங்காமல், முதல்வர், எம்.பி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தொடர்ந்து அவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் நடந்து கொள்வது கடும் கண்டனத்திற்குரியது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.