முதல்வர் சொல்லியது ஒன்று, மழை வெள்ளத்தில் பாதித்த மக்கள் சொல்வது வேறொன்று..!

முதல்வர் சொல்லியது ஒன்று, மழை வெள்ளத்தில் பாதித்த மக்கள் சொல்வது வேறொன்று..!

Share it if you like it

சென்னையில் பெய்த கனமழையில் ஏழை எளியவர்கள் கடும் அவதி.

தமிழகம் முழுவதும் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏழை எளியவர்கள், விவசாயிகள், உட்பட பலர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னை உட்பட அதனை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று வரை நீர் வடியாத காரணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

மழை வெளத்தில் பாதித்த மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை ஆர்.எஸ்.எஸ். சேவா பாரதி. பா.ஜ.க மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து வழங்கியது. மழை வெள்ளத்தில் பாதித்த மக்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்று சந்தித்த பொழுது, மக்கள் அனைவரும் தங்கள் குறைகளையும், கவலையும், அவரிடம் தெரிவித்ததை ஊடங்கள், பத்திரிக்கைகள் தொடர்ந்து செய்திகளாக வெளியிட்டு இருந்ததை அனைவரும் அறிவர்.

எங்களுக்கு சோறு வேண்டாம் நிரந்தர தீர்வு தான் வேண்டும் என பெண்மணி ஒருவர் முதல்வரிடம் மிகவும் துணிச்சலாக கூறியது. ஐயா விடியல் தருகிறோம் என்று கூறினீர்களே இது தான் விடியலா? என நபர் ஒருவர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியது என சென்ற இடமெல்லாம் மக்கள் புகார் தெரிவித்து இருந்தனர்.

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள சென்ற பொழுது ஆளும் கட்சி மீது மக்கள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்று தி.மு.கவினர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் முதல்வர் பேசியதை முதல் காணொளியிலும், மக்கள் புகார் தெரிவித்ததை இரண்டாவது காணொளியிலும் நாம் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/offiofDJ/status/?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1458091374381879301%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2Fdmk-stalin-government-33%2F

Share it if you like it