கட்டுப்பாட்டை இழந்து பா.ஜ.க. தலைவரை அவன், இவன், என்று பேச துவங்கிய தி.மு.க.!

கட்டுப்பாட்டை இழந்து பா.ஜ.க. தலைவரை அவன், இவன், என்று பேச துவங்கிய தி.மு.க.!

Share it if you like it

பா.ஜ.க-வின் வளர்ச்சியை கண்டு அஞ்சும் தி.மு.க.

சில மாதங்களுக்கு முன்பு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் குறித்தும், அவரின் குடும்பம் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்து பேசிய காணொளிக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். அவர்கள் பின்னால் யார்? இருந்தார்கள் எந்த கட்சி அவர்கள் பின்னால் இருந்தது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். ஆளும் தி.மு.க அரசின் தவறுகளை நேர்மையான முறையில் சுட்டிக்காட்டி வரும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள். தி.மு.க தலைமைக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கொள்கை வேறுபாடு, கட்சி வேறுபாடு, என்று எது வேண்டுமானலும் இருக்கலாம், ஆனால் பொறுப்பான பதவியில் இருக்கும் பொழுது. யாராக இருந்தாலும் கண்ணியமான முறையில் பேச வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருக்கும். பா.ஜ.க-வின் வளர்ச்சியையும், அண்ணாமலையின் எழுச்சியையும்,பொறுத்து கொள்ள முடியாமல். திமு.க தற்பொழுது தனிநபர் விமர்சனத்தில் இறங்கி உள்ளது என்பதை தமிழக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி மற்றும் தி.மு.க-வின் மூத்த தலைவரும் எம்பியுமான ஆர்.எஸ்.பாரதியின் பேச்சின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பதற்கு இதுவே சிறந்த சான்று.


Share it if you like it