தொடரும் அவலம் – போன முறை கூமுட்டைகள் இம்முறை புழு வைத்த முட்டைகள்..!

தொடரும் அவலம் – போன முறை கூமுட்டைகள் இம்முறை புழு வைத்த முட்டைகள்..!

Share it if you like it

பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் அழுகிய முட்டை.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட முட்டைகளில் பெரும்பாலும் அழுகியும், கோழிக்குஞ்சுகள் வரும் நிலையில் முட்டைகள் இருந்ததை கண்டு பலர் தமிழக அரசிற்கு தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு இதே போன்ற ஒரு சர்ச்சை வெடித்து இருந்த நிலையில். மீண்டும் ஒரு துயர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

கரூர் நாகனுரில் ஊராட்சி ஒன்றி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த முட்டைகளில் புழு இருந்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவது ஒருபுறம் என்றால், மாணவர்களின் உயிரை பற்றி துளியும் கவலைக் கொள்ளாமல் இது போன்ற அழுகிய கூமுட்டைகளை வழங்குவது சரியா என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கியது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது கடும் எதிர்ப்பினையும், அமைச்சர் கீதா ஜீவன் அவர்களுக்கு காட்டமான கேள்வியையும் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுப்பி உள்ளார்.

Image


Share it if you like it