பொங்கல் பரிசு பையில் தரமற்ற பொருட்கள் மக்கள் அதிர்ச்சி.
தி.மு.க அரசு வழங்கும் பொங்கல் பரிசுப் பொருட்கள் தரமற்ற பொருட்கள் இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு தமிழகம் முழுவதும் எழுந்து வரும் நிலையில், தனக்கு வழங்கிய நாட்டு சக்கரை தரமற்ற முறையில் உள்ளதாக பெண்மணி ஒருவர் பொங்கல் பரிசு பையில் இருந்து எடுத்துக் காட்டும் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏழை, எளியவர்களுக்கு, பணம் தான் கொடுக்க முடியவில்லை, கொடுக்கும் பொருட்களையாவது தரமான முறையில் வழங்க கூடாதா என்று சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.