தேங்கியுள்ள மழைநீரில் நடிகர் மன்சூர் அலிகான் பாட்டு பாடி படகு ஓட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல்.
சென்னை மற்றும் புறநகர் உட்பட பல பகுதிகளில் கன மழை பெய்து வருவதன் காரணமாக, ஏழை, எளியவர்கள், உட்பட பலர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு கடும் இன்னல்களையும், வேதனைகளையும், சந்தித்து வருகின்றனர். தி.மு.க அரசு போதிய உதவிகளை எங்களுக்கு செய்யவில்லை என ஏழை, எளியவர்கள், முதல் கொளத்தூர் தொகுதி மக்கள் வரை பலரும் கடும் குற்றச்சாட்டை சுமத்தி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நட்சத்திர பேச்சாளர் மற்றும் திரைப்பட நடிகருமான மன்சூர் அலிகான் அவர்கள் குளம் போல் தேங்கிய மழை நீரில் படகு ஓட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.