இந்த மிரட்டல் வேலை எல்லாம் என்னிடம் வேண்டாம் திமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்..!

இந்த மிரட்டல் வேலை எல்லாம் என்னிடம் வேண்டாம் திமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்..!

Share it if you like it

ஆளும் கட்சி தூண்டுதல் பெயரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சமீபத்தில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது..

10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் இருந்த தி.மு.க ஆளும் கட்சியான பின்பு மெல்ல மெல்ல தனது சித்து வேலைகளை காட்ட துவங்கியுள்ளது. ஊழலற்ற, நேர்மையான, ஆட்சியை வழங்குவோம் என்று கூறிய தி.மு.க மீது மின்சாரம், ஸ்வீட் பாக்ஸ், என அடுக்கடுக்கான புகார்களை விடியல் அரசு மீது பா.ஜ.க தலைவர் ஆதாரத்தோடு நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார்.

இதனை பொறுத்து கொள்ள முடியாமல் அண்ணாமலை அவர்களின் மீது கோவம் அடைந்த விடியல் அரசு. பா.ஜ.க தலைவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களின் கோவத்திற்கு திமுக ஆளாகி விட கூடாது என்பதற்காகவும் அவர்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியிலேயே இந்த வக்கீல் நோட்டீஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்களின் முழுமையான பேட்டியை பிரபல பத்திரிக்கையான தினமலர் செய்தியாக வெளியிட்டு உள்ளது.

Image


Share it if you like it