காமுக தி.மு.க. நிர்வாகிகள்: கலக்கத்தில் பெண்கள்!

காமுக தி.மு.க. நிர்வாகிகள்: கலக்கத்தில் பெண்கள்!

Share it if you like it

தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு, பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தற்பொழுது பெரும் கேள்விக்குறியாக மாறி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் ரணத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு, இணையான மற்றொரு கொடூர சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. 22 வயது உடைய இளம் பெண் ஜோதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். இவரை தான், தி.மு.க.வை சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் மற்றும் நான்கு பள்ளி மாணவர்கள் உட்பட எட்டு பேர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தி.மு.க.வை சேர்ந்த ஹரிஹரன் என்பவன் ஜோதியிடம் நட்பாக பழகியுள்ளான். அதன் பின்பு, நட்பு காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, ஜோதியை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று, தன்னுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், தனது செல்போனில் இக்காட்சிகளை பதிவு செய்து, தனது நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளான். அதன்படி, இக்காணொளியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவோம், என ஜோதியை மிரட்டி ஜுனைத் அகமது (27), பிரவீன் (21), மாடசாமி (37) மற்றும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள், பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இச்சம்பவம் தான், தற்பொழுது தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. இதில், ஹரிஹரன் மற்றும் ஜூனைத் ஆகியோர் மாவட்ட தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு பள்ளி மாணவிகள், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. தி.மு.க.வின் மூத்த தலைவரும், பெரம்பலூர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் என்பவன் பழங்குடி இனத்தை சேர்ந்த 15-வயது உடைய சிறுமியை, படிக்க வைப்பதாக ஏமாற்றி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தான். இந்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள், ஜோதிக்கு தி.மு.க. நிர்வாகிகளால் இந்த கொடுமை நடந்துள்ளது. மேலும், சென்னையிலும் இதே போன்றதொரு சம்பவம் அண்மையில் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே சம்பவம், பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் நிகழ்ந்து இருந்தால், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் தி.மு.க. எம்பி கனிமொழி உடனே கதளி ஆடி இருப்பார்கள். பாவம் தி.மு.க ஆட்சி என்பதால் தற்பொழுது சைலென்ட் மோடில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

Share it if you like it