கூட்டணியில் விரிசலா? காங்., திடீர் கோஷம்!

கூட்டணியில் விரிசலா? காங்., திடீர் கோஷம்!

Share it if you like it

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. அந்த வகையில், வி.சி.க, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளில் எங்களுக்கு, அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் தான், காங்கிரஸ் கட்சியை சேரந்த தொண்டர்கள், தி.மு.க-வை கண்டித்து கோஷம் எழுப்பிய காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது.

அதிகார பலம், படை பலம் மற்றும் 12 கட்சிகளின் துணையோடு, தி.மு.க கூட்டணி நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் தனித்தே களம் கண்டது. தி.மு.க-வின் பொய் பிரச்சாரம், மோடி வெறுப்பு என அனைத்தையும், கடந்து தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுத்தது. பா.ஜ.க-வின் இந்த அசுர வளர்ச்சி எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமில்லாமல், ஆளும் கட்சியினருக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது.

பா.ஜ.க-வின் வளர்ச்சியை தமிழகத்தில் தடுக்கவும். இதே வெற்றி கூட்டணி 2024-ஆம் ஆண்டு வரை தொடரவும். கூட்டணி தர்மபடி மேயர், மற்றும் துணை மேயர் பதவிகளில் எங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும். என கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால், அது குறித்து எல்லாம் ஆளும் தி.மு.க அரசு, கவலைப்படாமல். தனது கூட்டணி கட்சிகளின் முதுகில் குத்தியுள்ளது. தற்பொழுது ஒவ்வொரு சம்பவமாக வெளிச்சத்திற்கு வர துவங்கியுள்ளது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட, திருப்பெரும்புதூர் நகராட்சித் தலைவர் பதவியை, தி.மு.க வேட்பாளர் தட்டி தூக்கியுள்ளார். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள், தி.முக எங்களுக்கு துரோகம் செய்து விட்டதாக கோஷம் எழுப்பியுள்ளனர். இக்காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது.


Share it if you like it