மக்கள் பிரச்சினையை மறந்து உதயநிதியை பாராட்டுவதில் நேரம் செலவிடும் திமுக எம்பிக்கள்..!

மக்கள் பிரச்சினையை மறந்து உதயநிதியை பாராட்டுவதில் நேரம் செலவிடும் திமுக எம்பிக்கள்..!

Share it if you like it

மக்கள் பிரச்சனைக்கு முக்கியத்துவம் வழங்காமல் உதயநிதியை புகழ்ந்து தள்ளும் எம்பிக்கள்.

மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் இடமாக உள்ள சட்டசபையை தமிழக முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதியை புகழ்ந்து தள்ளும் இடமாக தி.மு.கவை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாற்றி வருவதை தமிழக மக்கள் வேதனையுடன் பார்த்து வரும் நிலையில், இதனை எல்லாம் தாண்டி இந்திய பாராளுமன்றத்திலும் தி.முக-வின் வாரிசு தலைவர் குறித்தும், ஸ்டாலின் பற்றியும், தி.மு.க எம்பிக்கள் புகழ்ந்து பேசி வருவதை பார்த்து, மற்ற மாநில எம்பிக்கள் கேலியும் கிண்டலும் செய்யும் அவலநிலையை தமிழகத்திற்கு தி.மு.க உருவாக்கி விட்டது என பலர் கடும் குற்றச்சாட்டை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இனியும் நாடாளுமன்றத்தின் நேரத்தை விணடிக்காமல், மக்கள் பிரச்சனை குறித்து தி.மு.க எம்பிக்கள் பேச முன் வர வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.


Share it if you like it