கொளத்தூர் தொகுதியை மறந்த முன்கள பணியாளர்கள் கதறி அழும் பெண்கள்..!

கொளத்தூர் தொகுதியை மறந்த முன்கள பணியாளர்கள் கதறி அழும் பெண்கள்..!

Share it if you like it

கொளத்தூர் தொகுதி மக்கள் தமிழக முதல்வர் மீது குற்றச்சாட்டு.

சென்னையில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக கொளத்தூர் தொகுதி எந்த அளவுக்கு மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது என்பதை அனைவரும் நன்கு அறிவர். இரண்டு முறைக்கு மேல் கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ-வாக ஸ்டாலின் இருந்தும் கூட முறையான உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை என்று அத்தொகுதி மக்கள் விடியல் அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தனர்.

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எங்களுக்கு முழுமையான நிவாரண உதவிகளை கூட ஆளும் கட்சி செய்யவில்லை என்று பலர் தங்களது வேதனையை வெளிப்படுத்தி வரும் நிலையில். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சில இடங்களில் எந்தவித முன்னறிவிப்பையும் வழங்காமல் ஏழை எளிய மக்களின் வீடுகளை தி.மு.க அரசு இடித்து தள்ளி உள்ளது.

மத்திய அரசு, பாரதப் பிரதமர் மோடி, பா.ஜ.க மீது விமர்சனம் வைக்க வேண்டும் என்றால் அலறி அடித்து கொண்டு அண்ணாமலையிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கும் முன்களபணியாளர்கள் இன்று வரை கண்ணீர் சிந்தும் கொளத்தூர் தொகுதி மக்களை சந்திக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it