தி.மு.க அரசு வழங்கிய பொங்கல் பரிசு பொருட்களில் ஹிந்தி மொழி அடங்கிய வாசகங்கள் இடம் பெற்று உள்ளது.
ஹிந்தி தெரியாது போடா, என்ற வாசகம் கொண்ட (டீ சர்ட்டை) உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களின் ஆதரவாளர்கள் அணிந்து கொண்ட புகைப்படம் சமீபத்தில் வைரலாகி இருந்தது. ஹிந்தியை தாய் மொழியாக, கொண்டு தமிழகத்தில் வாழும் மக்களின் உணர்வுகளை இது மிகவும் புண்படுத்தி இருந்தது.
ஹிந்தியை அவமதித்து விட்டு, ஹிந்தி பேசும் மாநிலங்களில் இருந்து, பொருட்களை கொள்முதல் செய்து. ரேஷன் கடைகளின் மூலம் தமிழக மக்களுக்கு, வழங்கி வரும் தி.மு.க-வின் உண்மையான, சுயரூபத்தை மக்கள் புரிந்து கொண்டு. இனிமேலாவது அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.