24 மணி நேரம் கெடு விதித்த செந்தில் பாலாஜி..! 1 மணி நேரத்தில் ஆதாரத்தை வெளியிட்டு விடியல் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்த அண்ணாமலை..!

24 மணி நேரம் கெடு விதித்த செந்தில் பாலாஜி..! 1 மணி நேரத்தில் ஆதாரத்தை வெளியிட்டு விடியல் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்த அண்ணாமலை..!

Share it if you like it

மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது குறித்த ஆதாரங்களை 24 – மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார்.

அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது எனவும் தன்னிடம் ஆதாரம் உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது.

அண்ணாமலை ஆதாரத்தை எப்போது எங்கு வெளியிட்டாலும் அங்கு நான் வர தயார். அதுமட்டுமின்றி தன்னிடம் உள்ள ஆதாரங்களை 24-மணி நேரத்தில் வெளியிட வேண்டும் இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலைக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்து இருந்தார்.

இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அமைச்சரின் சவாலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 1 மணி நேரத்திற்குள் ஆதாரத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.


Share it if you like it